பிளாக் டீல் மூலம் பேடிஎம் நிறுவனத்தின் 3% பங்குகளை விற்ற அலிபாபா - பங்குகளை வாங்கிய மோர்கன் ஸ்டான்லி

January 13, 2023

சீனாவைச் சேர்ந்த அலிபாபா குழுமம், பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில், தனக்கிருந்த 3% பங்குகளை விற்றுள்ளது. சுமார் 1031 கோடி ரூபாய்க்கு, பிளாக் டீல் மூலம் இந்த பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தேசிய பங்குச் சந்தையில் உள்ள தகவல்கள் அடிப்படையில், அலிபாபா நிறுவனம், 19.2 மில்லியன் பங்குகளை ஒரு பங்கு 536.95 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. இந்நிலையில், விற்பனை செய்யப்பட்ட பங்குகளில், மோர்கன் ஸ்டான்லி ஆசியா நிறுவனம், 5.5 மில்லியன் பங்குகளை வாங்கி […]

சீனாவைச் சேர்ந்த அலிபாபா குழுமம், பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில், தனக்கிருந்த 3% பங்குகளை விற்றுள்ளது. சுமார் 1031 கோடி ரூபாய்க்கு, பிளாக் டீல் மூலம் இந்த பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தேசிய பங்குச் சந்தையில் உள்ள தகவல்கள் அடிப்படையில், அலிபாபா நிறுவனம், 19.2 மில்லியன் பங்குகளை ஒரு பங்கு 536.95 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.

இந்நிலையில், விற்பனை செய்யப்பட்ட பங்குகளில், மோர்கன் ஸ்டான்லி ஆசியா நிறுவனம், 5.5 மில்லியன் பங்குகளை வாங்கி உள்ளது. மேலும், கீசாலோ மாஸ்டர் பண்ட் 4.98 மில்லியன் பங்குகளை வாங்கியுள்ளது. மீதமுள்ள பங்குகளை வாங்கியுள்ள பல்வேறு நிறுவனங்கள் குறித்த விவரங்கள் வெளிவரவில்லை. இதனால், பேடிஎம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்று ஒரே நாளில் 6.2% சரிந்து 543.2 ரூபாய்க்கு வர்த்தகமானது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu