அலிபாபா நிறுவனம் ஆரம்பத்திலிருந்தே பேடிஎம் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய வர்த்தக நாளில், தன்னிடம் இருந்த 3.4% பேடிஎம் பங்குகளை அலிபாபா நிறுவனம் பிளாக் டீல் மூலமாக விற்றுள்ளது. ஏற்கனவே, தன்னிடம் இருந்த பேடிஎம் பங்குகளை விற்ற அலிபாபா நிறுவனம் இன்று எஞ்சியிருந்த 2.1 கோடி பங்குகளையும் விற்றதால், பேடிஎம் நிறுவனத்தில் தனக்கு இருந்த அனைத்து பங்குகளையும் அலிபாபா வெளியேற்றி உள்ளது. கடந்த சில தினங்களாக பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து வந்த நிலையில், இன்று அலிபாபா நிறுவனம் தனது பேடிஎம் பங்குகளை விற்றதன் எதிரொலியாக, பங்குகள் 9% சரிந்து ஒரு பங்கு 646 ரூபாய்க்கு வர்த்தகமானது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில், பேடிஎம் நிறுவனத்தின் 6.26% பங்குகள் அலிபாபா வசம் இருந்தது குறிப்பிடதக்கது. மேலும், ஜொமாட்டோ நிறுவனத்திலிருந்து, 3% பங்குகளை அலிபாபா நிறுவனம் வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, இந்திய நிறுவனங்களின் பங்குதாரர் அந்தஸ்தில் இருந்து அலிபாபா நிறுவனம் தொடர்ந்து வெளியேறி வருவது கவனிக்கதக்கது.