மெக்சிகோவில் காட்சிப்படுத்தப்பட்ட ஏலியன் உடல்கள்

September 14, 2023

மெக்சிகோ நாட்டில், காங்கிரஸ் பிரதிநிதிகள் விசாரணை சபையில், 2 ஏலியன் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வேற்று கிரகவாசிகள் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வேற்று கிரகவாசிகள் குறித்த பல்வேறு சர்ச்சை செய்திகளும் இணையத்தில் வெளி வருகின்றன. இந்த நிலையில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் ஜெய்மீ மாஸ்சன் என்பவர், 1000 ஆண்டுகள் பழமையான ஏலியன் உடல்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தியுள்ளார். இந்த உடல்கள் மம்மிகளாக மாற்றப்பட்டுள்ளன. இவை நிச்சயமாக மனிதரின் […]

மெக்சிகோ நாட்டில், காங்கிரஸ் பிரதிநிதிகள் விசாரணை சபையில், 2 ஏலியன் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
வேற்று கிரகவாசிகள் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வேற்று கிரகவாசிகள் குறித்த பல்வேறு சர்ச்சை செய்திகளும் இணையத்தில் வெளி வருகின்றன. இந்த நிலையில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் ஜெய்மீ மாஸ்சன் என்பவர், 1000 ஆண்டுகள் பழமையான ஏலியன் உடல்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தியுள்ளார். இந்த உடல்கள் மம்மிகளாக மாற்றப்பட்டுள்ளன. இவை நிச்சயமாக மனிதரின் உடல் அல்ல என அவர் தெரிவித்துள்ளார். ஏலியன்களால் வரையப்பட்டவை என சொல்லப்படும் நாஸ்கோ லென்ஸ் ஓவியங்கள் இருக்கும் நாஸ்கா பாலைவனப் பகுதியில், இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த உடல்களில், தலையின் பின்பக்க பகுதி மிகவும் பெரியதாக உள்ளது. மேலும், பெரிய கண்கள், பெரிய மூளைகள், உள்ளிழுக்கும் வகையிலான கழுத்து பகுதி, 3 விரல்களைக் கொண்ட கைகள் ஆகியவை உள்ளன. முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு, பெரு நாட்டில் கண்டெடுக்கப்பட்டதாக ஏலியன் உடல் ஒன்றை மாஸ்சன் அறிமுகப்படுத்தினார். பின் நாட்களில் அது மனித குழந்தையின் மம்மியாக்கப்பட்ட உடல் என கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஏலியன் உடலை அவர் காட்சிப்படுத்தியுள்ளது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu