செவ்வாய் கிரகத்தில் மனித முகம் போன்ற அமைப்பு - புகைப்படம் வெளியீடு

October 18, 2024

செவ்வாய் கிரகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கு மனிதத் தலையைப் போன்ற ஒரு பாறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி எடுத்த புகைப்படத்தில் இந்த பாறை தென்பட்டது. செவ்வாய் கிரகத்தின் கடுமையான சூழலில் மனித முகம் போன்ற அமைப்பில் இந்த பாறை எவ்வாறு உருவானது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பாறை, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. இது குறித்து […]

செவ்வாய் கிரகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கு மனிதத் தலையைப் போன்ற ஒரு பாறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி எடுத்த புகைப்படத்தில் இந்த பாறை தென்பட்டது. செவ்வாய் கிரகத்தின் கடுமையான சூழலில் மனித முகம் போன்ற அமைப்பில் இந்த பாறை எவ்வாறு உருவானது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பாறை, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.

இது குறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இந்த பாறை நீண்ட காலத்திற்கு முன்பு அந்த இடத்தில் நீர் இருந்ததால் உருவான வண்டல் பாறையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். செவ்வாய் கிரகத்தில் பல இடங்களில் இது போன்ற அசாதாரண வடிவிலான பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் காலநிலை மாற்றம் மற்றும் பூகம்பங்கள் போன்ற இயற்கை நிகழ்வுகளால் உருவானவையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu