தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிராக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இன்று ஒரே நாளில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என நேற்றைய தினத்தில் கருத்துக்கணிப்பு வெளியானது. இதன் விளைவாக, நேற்று ஒரே நாளில் அதானி குழும பங்குகள் 18% வரை உயர்ந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் இன்றைய தினத்தில், அதானி குழுமத்தை சேர்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இன்றைய காலை நேர நிலவரப்படி, அதானி டோட்டல் கேஸ் 18% , அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 12% , அதானி பவர் 10% , அதானி கிரீன் எனர்ஜி 7% , அதானி எண்டர்பிரைசஸ் 7% , அதானி போர்ட்ஸ் 8% , அதானி வில்மர் 8.5% , அம்புஜா சிமெண்ட்ஸ் 9.6% , என்டிடிவி 12% அளவுக்கு வீழ்ச்சியை பதிவு செய்திருந்தன.