அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரியும், நிரந்தர பணியிடங்களில் அயல் பணி மூலம் ஆட்களை நியமிப்பதை கண்டித்தும் வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.மக்களுக்கு பொதுச்சேவை வழங்குவதில் வங்கிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதில் நாட்டின் நகரங்கள் மற்றும் இன்றி கிராமங்களிலும் வங்கி சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் தற்போது வங்கி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும் வங்கி பரிவர்த்தனைகளும் அதிகரித்து வருகிறது. இதனால் வங்கி ஊழியர்களின் வேலை பளு அதிகமாக உள்ளது. ஆனால் போதிய அளவுக்கு ஊழியர்கள் பணியில் இல்லாததால் ஊழியர்கள் சிரம படுகின்றனர். ஊழியர்கள் ஓய்வு பெறுதல், பதவி உயர்வு மற்றும் ஊழியர்கள் இறத்தல் போன்ற சமயங்களில் காலியாகும் பணியிடங்களை மீண்டும் நிரப்பாமல் உள்ளனர். மேலும் வங்கியில் வர்த்தகம் அதிகரிக்கும் பொழுது கூடுதல் ஊழியர்களும் நியமிக்கப்படுவதில்லை. தற்போது ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் சுமார் 50 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி கிளைகளில் பணிச்சுமை அதிகமாகி உள்ளது. மேலும் ஊழியர் பற்றாக்குறையினால் சிறந்த சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.அதே நேரத்தில் எழுத்தர் போன்ற நிரந்தர பணிகளுக்கு அதிக அளவு ஊதியம் வழங்க வேண்டும் என்பதற்காக அயல் பணி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை கண்டித்தும் வங்கி ஊழியர்களின் காலி பணியிடங்களை நிரப்பவும் கோரி 11ஆம் தேதி வரையிலும், மாநில அளவிலான வேலை நிறுத்தம் ஜனவரி 2ஆம் தேதி முதல் 6ம் தேதி வரையிலும், ஜனவரி 19ஆம் தேதி மற்றும் 20ஆம் தேதியில் அகில இந்திய அளவில் இரண்டு நாட்களும் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.