இந்த வார இறுதியில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும்படி தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் விளவங்காடு சட்டசபை தொகுதியில் போட்டியாளர் களிடம் இருந்து வேட்பு மனுக்கள் பெறும் நடவடிக்கை 20ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது. இந்நிலையில் தேர்தல் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கேட்பதற்காக அனைத்து கட்சிகளின் கூட்டங்களையும் கூட்டும்படி தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்பு அமைதி கட்சிகளின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் இந்த வாரம் மனு தாக்கல் செய்யும் காலகட்டம் என்பதால் இந்த வார இறுதியில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.