ஆண்டுதோறும் பாராளுமன்ற முதல் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
ஆண்டுதோறும் பாராளுமன்ற முதல் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். அதில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இது முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்த உள்ளார். அதனை தொடர்ந்து நாளை மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது. பீஹார் ஆட்சி மாற்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பல்வேறு கட்சிகள் பிரச்சனைகளை எழுப்பலாம் என்பதன் காரணமாக இந்த கூட்டத்தொடரை சமூகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை பெறுவதற்காக இன்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதனை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற கட்சி தலைவர் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.