நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு ஜூலை 19-ல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 11ம் தேதி வரையில் மொத்தம் 23 நாட்கள் நடைபெறுகிறது. அப்போது விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, மணிப்பூர் கலவரம், ஆளுநர்களின் அத்து மீறல்கள் போன்ற விவகாரங்களை நாடாளுமன்றத்தில் கூட்டாக எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. பொது சிவில் சட்ட விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு ஜூலை 19-ல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.