பாகிஸ்தானில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கி இருக்கும் அனைத்து வெளிநாட்டினரும் நவம்பர் 1ம் தேதிக்குள் வெளியேற்றப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், கிட்டத்தட்ட 3 லட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டினர் சட்டவிரோதமாக தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கி வருகின்றனர். அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையாக இது சொல்லப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பலுசிஸ்தான் மாகாண இடைக்கால அமைச்சர் ஜான் ஆஷலை, “ஆப்கானிஸ்தியர்கள் மட்டுமின்றி பாகிஸ்தானில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் அனைத்து வெளிநாட்டினரும் வெளியேற்றப்படுவர். அக்டோபர் 31ம் தேதிக்குள், அனைத்து வெளிநாட்டினரும் முறையாக அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவர்.” என கூறியுள்ளார்.