அலகாபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான அமித் தூபே, வியர்வை மூலம் கொரோனா தொற்றை கண்டறியும் பயோ சென்சாரை கண்டுபிடித்துள்ளார். இவர் நொய்டாவில் உள்ள குவாண்டா கால்குலஸ் நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது உலகிலேயே முதல் கொரோனா பயோ சென்சார் என தெரிவித்துள்ளார்.
இவரது கண்டுபிடிப்பு, வியர்வையைக் கொண்டே கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிந்து சொல்கிறது. இதனால், மூக்கு வழியாகவோ, வாய் வழியாகவோ மாதிரிகளை சேகரித்து, கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. எனவே, இந்த பயோ சென்சார் மூலம், கொரோனா பரிசோதனை மலிவாக மாறும் என்று கருதப்படுகிறது.