இலங்கையின் பிரபல நிழல் உலக தாதா கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட அவரை வழக்குரைஞர் வேடத்தில் வந்த நபர் துப்பாக்கியால் தாக்கினார். படுகாயமடைந்த சஞ்சீவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாதா கணேமுல்ல சஞ்சீவ ஏற்கெனவே ஏழு கொலை வழக்குகளில் தேடப்பட்ட நபராக இருக்கிறார். நேபாளத்திற்கு தப்பிச் சென்ற சஞ்சீவ, 2023-ஆம் ஆண்டு நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.