நகர்ப்புற உள்ளாட்சி பணிகள் ரூ.1,083 கோடி ஒதுக்கீடு

January 27, 2023

நகர்ப்புற உள்ளாட்சி பணிகளுக்காக ரூ.1,083 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், பூங்கா அமைத்தல், நீர்நிலை மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்கு 1,083 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் குடிநீர் திட்டம் 36.60 கோடி ரூபாய்; சிதம்பரம் குடிநீர் திட்டம் 143.19 கோடி ரூபாய்; துறையூர் குடிநீர் திட்டம் 108.90 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது. ஓசூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன் கூடிய பாதாள சாக்கடை திட்டம்; துாத்துக்குடியில், […]

நகர்ப்புற உள்ளாட்சி பணிகளுக்காக ரூ.1,083 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், பூங்கா அமைத்தல், நீர்நிலை மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்கு 1,083 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் குடிநீர் திட்டம் 36.60 கோடி ரூபாய்; சிதம்பரம் குடிநீர் திட்டம் 143.19 கோடி ரூபாய்; துறையூர் குடிநீர் திட்டம் 108.90 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது. ஓசூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன் கூடிய பாதாள சாக்கடை திட்டம்; துாத்துக்குடியில், விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம்; திருவேற்காடு, வந்தவாசி, ஜோலார்பேட்டை, வேதாரண்யம், அறந்தாங்கி உள்ளிட்ட நகரங்களில் 72 பசுமைவெளி மற்றும் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது.

குன்றத்துார், வடலுார், ராஜபாளையம், முசிறி, ராமேஸ்வரம் நகரங்களில் 54 நீர்நிலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. இப்பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதை ஏற்ற அரசு 131 பணிகளை மேற்கொள்ள 1,083.18 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ்மீனா வெளியிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu