தேசிய குவாண்டம் மிஷனுக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு

April 20, 2023

தேசிய குவாண்டம் மிஷனுக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அமைச்சரவை ஒப்புதல் செய்துள்ளது. குவாண்டம் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் அது தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் ‘தேசிய குவாண்டம் மிஷன்’ (என்க்யூஎம்) திட்டத்துக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி 2023 முதல் 2031 வரையில் குவாண்டம் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாட்டுப் பணிகளுக்கு செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை […]

தேசிய குவாண்டம் மிஷனுக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அமைச்சரவை ஒப்புதல் செய்துள்ளது.

குவாண்டம் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் அது தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் ‘தேசிய குவாண்டம் மிஷன்’ (என்க்யூஎம்) திட்டத்துக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி 2023 முதல் 2031 வரையில் குவாண்டம் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாட்டுப் பணிகளுக்கு செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், “குவாண்டம் தொழில்நுட்பமானது சுகாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, தகவல் பாதுகாப்பு என பலதுறைகளில் பெரும் மாற்றங்களை கொண்டு வரும். இத்திட்டத்தின் கீழ் குவாண்டம் கம்ப்யூட்டிங், குவாண்டம் கம்யூனிகேஷன், குவாண்டம் சென்சிங் மற்றும் மெட்ராலஜி, குவாண்டம் மெட்டீரியல் மற்றும் டிவைசஸ் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu