கரும்பு விவசாயிகளுக்கு உதவியாக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு ரூ.247 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசின் நிர்ணயத்திற்கு இணங்க, ரூ.2,919.75யுடன் மாநிலத்தின் ஊக்கத்தொகை ரூ.215 சேர்ந்து, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3,134.75 கிடைக்கும். இந்த சிறப்பு ஊக்கத்தொகையால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள். 2023-24 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.














