சரத் பவரின் புதிய கட்சிக்கு கொம்பு இசைக்கருவி ஊதும் மனிதன் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவிய சரத் பவார் கட்சியின் முக்கிய தலைவராக அவரின் அண்ணன் மகன் அஜித் பவார் இருந்தார். மேலும் பெரும்பான்மை எம்.எல். ஏக்கள் கொண்டு அஜித் பவார் தனியாக செயல்பட்டார். இதனால் சரத் பவார் அணி, அஜித் பவார் அணி என தேசிய காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தது. பின்னர் தேர்தல் ஆணையம் தேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவாருக்கே சொந்தம் என அறிவித்து, கடிகார சின்னத்தையும் அவரது அணிக்கே வழங்கியது. இதனால் சரத் பவார் புதிய கட்சி தொடங்கும் நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தனது கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் சந்திர பவார் என பெயர் வைத்திருந்தார். தற்போது இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக இவரது கட்சிக்கு கொம்பு இசைக்கருவி ஊதும் மனிதன் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.