சென்னை மெட்ரோ ரயிலுக்கு  78 பெட்டிகளை தயாரிக்கும் ஆர்டரை பெற்றது ஆல்ஸ்டாம் நிறுவனம்

November 12, 2022

சென்னை மெட்ரோ ரயிலுக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 78 ரயில் பெட்டிகளை தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஆல்ஸ்டாம் என்ற தனியார் நிறுவனம் பெற்றிருக்கிறது. சென்னை பூந்தமல்லி பைபாஸ் மற்றும் லைட் ஹவுஸ் இடையே சுமார் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படவிருக்கிறது. அந்த வழித்தடத்தில் 28 மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படவிருக்கும் ரயில்களுக்கு தேவையான பெட்டிகளை தயாரிப்பதற்காக 798 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை ஆல்ஸ்டாம் […]

சென்னை மெட்ரோ ரயிலுக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 78 ரயில் பெட்டிகளை தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஆல்ஸ்டாம் என்ற தனியார் நிறுவனம் பெற்றிருக்கிறது.

சென்னை பூந்தமல்லி பைபாஸ் மற்றும் லைட் ஹவுஸ் இடையே சுமார் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படவிருக்கிறது. அந்த வழித்தடத்தில் 28 மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படவிருக்கும் ரயில்களுக்கு தேவையான பெட்டிகளை தயாரிப்பதற்காக 798 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை ஆல்ஸ்டாம் என்ற ரயில்பெட்டி தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.

ஒப்பந்தப்படி 3 ரயில்களுக்கு தேவையான 78 பெட்டிகளை நவீன வசதிகளுடன் தயாரிக்கவும், அவற்றை இயக்குவதற்கு ஊழியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க நிறுவனம் முன்வந்திருக்கிறது. மேலும் புதியதாக தயாரிக்கப்படவிருக்கும் பெட்டிகள் சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu