புயலால் உருவான மரக் கழிவுகளில் இருந்து மாற்று எரிபொருள்

December 13, 2022

சென்னை மாநகரில் புயலால் உருவான மரக்கழிவுகளில் இருந்து நிலக்கரிக்கு இணையான மாற்று எரிபொருளை மாநகராட்சி நிர்வாகம் தயாரித்து, தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய உள்ளது. மேன்டூஸ் புயலால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மணிக்கு சுமார் 70 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதில் சென்னையில் ஏராளமான மரங்கள் மற்றும் மரக் கிளைகள் முறிந்து விழுந்தன. இப்படி 207 மரங்களும், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக் கிளைகளும் சாலைகளில் விழுந்ததாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 644 டன் […]

சென்னை மாநகரில் புயலால் உருவான மரக்கழிவுகளில் இருந்து நிலக்கரிக்கு இணையான மாற்று எரிபொருளை மாநகராட்சி நிர்வாகம் தயாரித்து, தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய உள்ளது.

மேன்டூஸ் புயலால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மணிக்கு சுமார் 70 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதில் சென்னையில் ஏராளமான மரங்கள் மற்றும் மரக் கிளைகள் முறிந்து விழுந்தன. இப்படி 207 மரங்களும், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக் கிளைகளும் சாலைகளில் விழுந்ததாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 644 டன் மரக் கழிவுகள் புயலினால் ஏற்பட்டுள்ளது.

இந்த மரக்கழிவு குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இந்த மரக்கழிவுகளை நவீன இயந்திரங்கள்உதவியுடன் பொடியாக்குகிறோம். அந்த பொடியை நிலக்கரிக்கு இணையான மாற்று எரிபொருளாக மாற்றுகிறோம். இது தொழிற்சாலை கொதிகலன்களில், நிலக்கரிக்கு பதிலாக மாற்று எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது காற்று மாசுவையும் ஏற்படுத்துவதில்லை; சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu