ஜம்மு காஷ்மீரில் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வானிலை சீரான பின்னரே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மோசமான வானிலை காரணமாக, பால்டால் மற்றும் நுன்வானில் உள்ள ஸ்ரீ அம்ரேஷ்வர் தாம் புனித யாத்திரையும் இன்று நிறுத்தப்பட்டுள்ளது. அதோடு புனித குகைக்கு யாத்ரீகர் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வானிலை சீரான பின்னரே யாத்ரீகர்கள் யாத்திரைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த முறை 3.60 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்திருந்தனர். அதே சமயம், இந்த எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.