அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் மாவுய் தீவை சீரமைக்க அவருடைய அறக்கட்டளை நிதியிலிருந்து சுமார் 820 கோடி நிதி உதவி அளித்துள்ளார்.
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் உள்ள மாவுய் தீவு பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ பரவியது. இந்த தீ நகருக்குள் பரவியதில் வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த காட்டுதீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கியுள்ளது. இன்னும் பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவை தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இந்நிலையில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் மாவுய் தீவை சீரமைக்க அவருடைய அறக்கட்டளை நிதியிலிருந்து சுமார் 820 கோடி நிதி உதவி அளித்துள்ளார்.