பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் விற்பனையாளர்களுக்கான கட்டணங்களை உயர்த்துகிறது. இதன் காரணமாக, அமேசான் இணையதளம் மூலம் விற்கப்படும் பல்வேறு பொருட்களின் விலைகள் உயரும் என கருதப்படுகிறது.
அமேசான் நிறுவனம் பல்வேறு விற்பனையாளர்களிடம் பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது. இந்த நிலையில், வர்த்தகர்களுக்கான நீண்ட கால கிடங்கு கட்டணம் மற்றும் வாடிக்கையாளர்களால் திருப்பி அனுப்பப்படும் பொருட்களுக்கான பணத்தை திருப்பி அளிப்பதற்கான கட்டணம் ஆகியவற்றை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால், பரவலான முறையில் அமேசான் தளத்தில் விற்கப்படும் பொருட்களின் விலைகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.