வால்மார்ட், ரிலையன்ஸுடன் போட்டி தீவிரம்; 2030க்குள் மொத்த முதலீடு $26 பில்லியனாக உயரும்
அனைத்து மாநிலங்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் புதிய கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் நெட்வொர்க், டெலிவரி பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்காக மட்டும் ரூ.2,000 கோடி (அல்லது 233 மில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வால்மார்ட்டின் பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் ரீட்டெயிலை எதிர்த்து, இந்திய இணைய வணிக சந்தையில் தனது நிலைமையை வலுப்படுத்த அமேசான் திட்டமிட்டு உள்ளது. மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்தமாக $26 பில்லியன் முதலீடு செய்யும் நோக்கத்தையும் நிறுவனம் உறுதி செய்துள்ளது.