அமெரிக்காவில் உள்ள ரிபப்ளிக் ஃபர்ஸ்ட் பேங்க் திவாலாகி உள்ளது. நிகழாண்டில் திவாலாகும் முதல் வங்கியாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிலடெல்பியாவை சேர்ந்த ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்க் திவால் ஆனதை அடுத்து, வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொண்டு அமெரிக்க அரசு தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் புல்டன் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து ஒப்பந்த அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதன்படி, நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் பென்சில்வேனியா ஆகிய பகுதிகளில் உள்ள பர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்க் கிளைகள் புல்டன் பேங்கின் கிளைகளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் டெபாசிட் தொகைகளை வழக்கம்போல கையாளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி கடன் பெற்றவர்கள் அதே முறையில் கட்டணங்களை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.