நவம்பர் 2023 முதல் அக்டோபர் 2024 வரையிலான காலகட்டத்தில் 519 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் ஆசாத், இந்த நபர்கள் வணிக மற்றும் பட்டய விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையின் அறிக்கை படி, இத்தனை இந்தியர்கள் சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் தங்கியிருந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.