கடந்த ஆண்டு ஈரானிலிருந்து 1.1 மில்லியன் தோட்டாக்களை அமெரிக்கா கைப்பற்றியது. இந்த தோட்டாக்களை, உக்ரைனுக்கு வழங்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், அதன் ராணுவ உதவிகளை அதிகரிக்கும் விதமாக, தோட்டாக்களை வழங்கவுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில், ஏமனில் இருந்த கப்பலில் இருந்து ஈரான் நாட்டு குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இவை, உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த குண்டுகளை பயன்படுத்தக்கூடிய வகையிலான துப்பாக்கிகளும் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பல்வேறு ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி உள்ள நிலையில், இது உக்ரைனின் பலத்தை மேலும் அதிகரிப்பதாக இருக்கும் என கூறப்படுகிறது.