ஹைதி வன்முறை - அதிபர் ஹென்றி பதவி விலக ஒப்புதல்

March 13, 2024

ஹைதியில் அரசுக்கு எதிராக ஆயுத கும்பல்களின் வன்முறை அதிகரித்துள்ளதால் அதிபர் ஏரியல் ஹென்றி பதவி விலக ஒப்புக் கொண்டுள்ளார். கரீபியன் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஹைதி நாட்டில் பல்வேறு ஆயுத கும்பல்கள் அரசுக்கு எதிராக நடத்தி வரும் வன்முறை சம்பவங்களினால் ஏராளமான பொதுமக்கள் பலியாகியுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டில் ஜிம்மி கிறிஸியர் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆயுத கும்பல் அப்போதைய அதிபர் ஜோவனில் வயமாய்சுக்கு ஆதரவாக செயல்பட்டது. அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது அது கடும் […]

ஹைதியில் அரசுக்கு எதிராக ஆயுத கும்பல்களின் வன்முறை அதிகரித்துள்ளதால் அதிபர் ஏரியல் ஹென்றி பதவி விலக ஒப்புக் கொண்டுள்ளார்.

கரீபியன் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஹைதி நாட்டில் பல்வேறு ஆயுத கும்பல்கள் அரசுக்கு எதிராக நடத்தி வரும் வன்முறை சம்பவங்களினால் ஏராளமான பொதுமக்கள் பலியாகியுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டில் ஜிம்மி கிறிஸியர் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆயுத கும்பல் அப்போதைய அதிபர் ஜோவனில் வயமாய்சுக்கு ஆதரவாக செயல்பட்டது. அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது அது கடும் தாக்குதலில் ஈடுபட்டது. பின்னர் ஜோவனில் கடந்த 2021 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அதை அடுத்து நாடு முழுவதும் ஆயுத கும்பல்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது பிரதமராக இருந்த ஏரியல் ஹென்றி நாட்டின் இடைக்கால அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். எனினும் ஜோவனில் படுகொலை குறித்த விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் புலனாய்வு அதிகாரிகள் அந்த படுகொலியில் ஹென்றிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுப்பினர். இந்த சூழ்நிலையில் அரசு பயணமாக ஹென்றி கென்யாவுக்கு கடந்த மாதம் 29ஆம் தேதி சென்று இருந்தார். அப்போது கிறிஸியர் தலைமையிலான ஆயுத குழு தலைநகர் போர்டிகோ பிரின்சில் தாக்குதல் நடத்தி அரசு கட்டிடங்களை கைப்பற்றியது. அதோடு இரண்டு பெரிய சிறைகளில் தாக்குதல் நடத்தி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை அவர்கள் விடுவித்துள்ளனர். சர்வதேச விமான நிலையத்தையும் கைப்பற்றுவதாக எச்சரித்துள்ளனர். நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை கும்பல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஹைதியில் அமைதியை ஏற்படுத்த ஹென்றி பதவி விலக வேண்டும் என்று அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் வலியுறுத்துகின்றன. அதையடுத்து புதிய இடைக்கால அரசு அமைந்த பின் தன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக ஹென்றி கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu