சிரியாவில் பதற்றம் - பயணங்களை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்

December 7, 2024

சிரியாவில் பதற்றம் காரணமாக பயணங்களை தவிர்க்க இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 2011-ஆம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஆசாத் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரிடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக வன்முறை குறைவாக இருந்த போதே, கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. ஹயத் தஹ்ரீர் அல்-ஷாம் அமைப்பின் தலைவர் அபு முகமது, பஷார் அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் அலெப்போ மற்றும் ஹமா […]

சிரியாவில் பதற்றம் காரணமாக பயணங்களை தவிர்க்க இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

2011-ஆம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஆசாத் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரிடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக வன்முறை குறைவாக இருந்த போதே, கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. ஹயத் தஹ்ரீர் அல்-ஷாம் அமைப்பின் தலைவர் அபு முகமது, பஷார் அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றி, ஹோம்ஸ் நோக்கி முன்னேறி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தப்பியோடுகின்றனர். இதையடுத்து, இந்திய அரசு சிரியாவுக்கான பயணங்களை தவிர்க்கவும், அவசரகால உதவி எண்ணாக +963993385973 மற்றும் மின் அஞ்சல் முகவரியாக hoc.damascus@mea.gov.in என அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu