மணிப்பூர் மாநிலத்தில் தொடர் வன்முறைகள் அரங்கேறி வரும் நிலையில், குகி பழங்குடியின மக்கள் தங்களுக்கான புதிய நாளிதழ் ஒன்றை தொடங்கியுள்ளனர். நாளிதழின் பெயர் ‘புரட்சியின் குரல்’ என்று பொருள் படும் படி அமைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பலதரப்பட்ட கோரிக்கைகளுக்கு பிறகு, நேற்று முன்தினம் பிராட்பேண்ட் இணைய சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கைப்பேசிகளில் இணைய சேவை கிடைக்காது. அதற்கான தடை நீடிக்கிறது. இந்த நிலையில், நடப்பு நிலவரங்களை உடனடியாக மக்களுக்கு தெரிவிக்கும் படி, சொந்தமாக புதிய செய்தித்தாள் தொடங்கப்பட்டுள்ளது. குகி இன பழங்குடி மக்கள் இதனை தொடங்கியுள்ளனர். முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் இந்த செய்தித்தாள் இயக்கப்படுகிறது. அனைத்து மலை கிராமங்களுக்கும் செய்தித்தாள் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.