குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் அமித்ஷா தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி மூன்றாவது கட்டமாக 26 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 12ஆம் தேதி தொடங்கியது. நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் அமித்ஷா குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். காந்திநகர் தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அமித்ஷா வெற்றி பெற்றார். மேலும் இந்த தொகுதியில் நேற்று மூன்று பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தியுள்ளார்.