ஜம்மு – காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்துள்ளார்.
ஜம்முவில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையானுக்கு பிரம்மாண்ட கோவில் அமைக்கப்பட்டது. ஜம்முவின் சித்ரா பகுதியில் 62 ஏக்கர் நிலத்தில் ரூ. 725 கோடி மதிப்பில் ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டள்ளது. இந்த புதிய கோவில் ஜம்முவில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த கோவிலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். ஆந்திராவுக்கு வெளியே திருப்பதி ஏழுமலையானுக்கு கட்டப்படும் 6-வது கோவிலாக ஜம்முவில் புதிய கோவில் அமைந்துள்ளது.