தேர்தல் பிரச்சாரத்திற்காக பெங்களூரில் நடைபெற உள்ள ரோடு ஷோவில் அமித்ஷா கலந்து கொள்ள உள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இதில் கர்நாடகாவில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 11 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி கர்நாடகாவில் இரண்டு முறை பிரச்சாரம் மேற்கொண்டார். தற்போது மத்திய மந்திரி அமித்ஷா பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்காக நேற்று இரவு பெங்களூர் வந்தடைந்தார். பின்னர் பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியான ஜனதா தளம் எஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நடைபெறும் தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் பெங்களூரு ஊரக பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்னப்பட்டினத்தில் அமித்ஷா ரோடு சோவில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.