தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் மீன் பதப்படுத்தப்படும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தனியார் மீன் பதப்படுத்தும் ஆளை செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென்று நேற்று அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 25 பெண்கள் மூச்சு திணறல் எடுத்து அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர். பின்னர் உடனடியாக மயக்கமடைந்த ஊழியர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.