சென்னை எண்ணூரில் திடீரென அம்மோனியம் வாயு வெளியேறியது. இதனால் மக்கள் பலருக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து அமோனியம் வாயு திடீரென நள்ளிரவில் வெளியேறியது. இதனால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் வாயு வெளியேறிய தனியார் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதனால் அங்கு நடைபெறும் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டும், ஆய்வுக்குழுவால் தொழிற்சாலையில் ஆய்வு செய்த பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்படும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.