சென்னை எண்ணூரில் உள்ள உரத்தொழிற்சாலையில் திடீரென அமோனிய வாயு கசிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள உரத் தொழிற்சாலையில் நள்ளிரவில் திடீரென அமோனிய வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இதனிடையே எண்ணூரில் அமைக்கப்பட்டுள்ள தனியார் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்துவரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து உறுதி செய்தது. மேலும் தமிழ்நாடு கடல் சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாய் இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.