விருதுநகரில் ஜவுளிப் பூங்காவுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஜவுளித்துறையை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையை ஈர்க்கவும் பிரதமர் மித்ரா ஜவுளிப் பூங்காக்கள் நாடெங்கும் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில், தமிழ்நாட்டின் விருதுநகரில் அமைக்கப்பட உள்ள ஜவுளிப் பூங்காவிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. தற்போது இந்த பூங்கா அமைவதன் மூலம் ஒரே இடத்தில் அனைத்து வசதிகளும் அமையவிருக்கிறது. சுமார் 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படவுள்ள இந்த பூங்கா மூலமாக தமிழ்நாட்டின் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.