தமிழக அரசிடம் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.ஆவின் பாலில் அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலின் கொள்முதல் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இதனை ஏற்ற அரசு ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். தரமான பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ஒரு ரூபாய் ஊக்க தொகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலை உயர்ந்த பட்ட போதிலும் விற்பனை விலையில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.