பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள் டிச.26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராமவர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், நடப்பு கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் 2023 மார்ச் மற்றும் ஏப்ரலில் நடக்க உள்ளன. இதில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள் 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
டிசம்பர் 26ம் தேதி முதல் ஜனவரி 3 வரை காலை 10:00 முதல் மாலை 5:00 வரை அரசு தேர்வுகள் இயக்குனரக மாவட்ட சேவை மையங்களுக்கு சென்று ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு கட்டணமாக பிளஸ் 1, பிளஸ் 2 - 1,000 ரூபாயும் 10ம் வகுப்புக்கு 500 ரூபாயும் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.