துருக்கி நாட்டில் பூமிக்குள் புதைந்துள்ள மிகப்பெரிய குகை நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 1,500 ஆண்டுகள் பழமையான இந்த நிலத்தடி நகரம், 1.5 கிலோமீட்டருக்கு மேல் பரந்து விரிந்துள்ளது. இந்த பகுதி, போர் காலங்களில் மறைவிடமாக பயன்படுத்தப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுவரோவியங்கள், மொசைக்குகள் மற்றும் மண்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மற்றும் பைசண்டைன் பேரரசின் வாழ்க்கையைப் பற்றிய புதிய தகவல்களை வழங்குவதாக அமைந்துள்ளது.