ஆந்திர பிரதேசத்தில், கடந்த வாரம் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், ஆந்திர பிரதேச மாநில அரசு 352 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 13.05 லட்சம் கோடி என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் 13 வெவ்வேறு துறைகளைச் சார்ந்த 1.17 கோடி மதிப்பிலான 260 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சனிக்கிழமை கையெழுத்தாகின. வெள்ளிக்கிழமை, 1187756 லட்சம் கோடி மதிப்பிலான 92 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த மாநாட்டில், சுற்றுலா துறையில் 117 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மதிப்பு 22096 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம், 30,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. எரிசக்தி துறையில், 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில், 884823 கோடி மதிப்பில் 40 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. வேளாண்துறையில் 1160 கோடி மதிப்பில் 15 ஒப்பந்தங்களும், கால்நடை வளர்ப்பு துறையில் 1020 மதிப்பில் 8 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம், 3750 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.