ஏஞ்சல் வரி முழுமையாக ரத்து செய்யப்படுவதாக இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, தொழில் முனைவோர், புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய பட்ஜெட்டில் ஏஞ்சல் வரி ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாக்க நிறுவனங்களுக்கு தேவையான மூலதன தொகையை வழங்கும் முதலீட்டாளர்கள் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வழங்கும் நிதி அல்லது மூலதனம் மீதான வரியானது, ஏஞ்சல் வரி என அழைக்கப்படுகிறது. மேலும், பட்டியலிடப்படாத நிறுவனங்களால், பங்குச்சந்தை நடவடிக்கைகளுக்கு வெளியே திரட்டப்படும் நிதி மீதான வருமான வரியும் ஏஞ்சல் டேக்ஸ் ஆகும். இந்த வரி முழுமையாக ரத்து செய்யப்படுவதால், புத்தாக்க நிறுவனங்களில் அதிக முதலீடுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.