வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிங்கங்களை வாகனங்களில் பார்க்கும் வசதி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனை மீண்டும் தொடர வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து பூங்கா அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுத்தனர். அதை தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் மூலம் ஏசி பஸ்கள் வாங்கப்பட்டது. தற்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு வண்டலூர் பூங்காவில் இந்த வாகன வசதி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் மான்களை வாகனத்தில் பார்க்கும் வசதியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பஸ்ஸில் ஒரே நேரத்தில் 28 பேர் பயணிக்க முடியும். இதற்கு நுழைவுச்சீட்டு வழங்க இரண்டு கவுண்டர்கள், கியூ ஆர் கோடு வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் வன உயிரினங்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வசதிகளின் கூடிய மருத்துவமனை வசதியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.