அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொது தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூபாய் 150 பெறப்பட்ட நிலையில் தற்போது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு செமஸ்டருக்கு ஒன்பது தாள்கள் எழுத வேண்டிய சூழ்நிலையில் ரூபாய் 2050 கட்டவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும், இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்வதற்கு 600 ரூபாயிலிருந்து 900 ரூபாய் ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.