தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக துணைத்தேர்வுகள் ஜூன் 25 முதல் நடத்தப்படும் எனவும், அதற்கான தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் முடிவுகளை அறிவித்தார். இந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் 95.03% ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 94.56% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக துணைத்தேர்வுகள் ஜூன் 25 முதல் நடத்தப்படும் எனவும், அதற்கான தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மே 14 முதல் 31-ந்தேதி வரை தங்கள் பள்ளி மூலமாகவே விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், விடைத்தாள் நகல்களை கோர விரும்பும் மாணவர்கள் மே 13 முதல் 17 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.