தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிப்பது குறித்து பல்வேறு வகையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என செங்கல்பட்டு ஆட்சியர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்கள் வாக்களிக்கும் போது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப்ரல் 20-ஆம் தேதி சாப்பிட செல்லும்போது காண்பித்தால் உணவு விலையில் 5% தள்ளுபடி செய்யப்படும் என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்கு பதிவு செய்துள்ளனர் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.