டெல்லி ராம் லீலா மைதானத்தில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து வரும் மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்துவதற்காக திரண்ட நிலையில் அவர்கள் முன்னேறுவதை தடுத்த போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 21 வயது விவசாயி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இதனால் இரண்டு நாட்கள் பேரணி செல்லும் திட்டத்தை விவசாயிகள் நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து பாரதிய கிஷான் சிங் தலைவர் தெரிவிக்கையில் அரியானா போலீசார் பஞ்சாப் மாநிலத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர். டிராக்டர்களை அடித்து நொறுக்கினார்கள். இதனை அடுத்து அரியானா முதல்வர், அரியானாவின் உள்துறை மந்திரி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் விவசாய மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் மார்ச் 14ஆம் தேதி ராம் லீலா மைதானத்தில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர். போராட்டம்,பேரணி, கருப்பு தினம் மகா பஞ்சாயத்து என விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்து அடுத்து கையில் எடுக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.