2024-ம் ஆண்டிற்கான வைக்கம் விருதுக்கு தேவநூர மஹாதேவா தேர்வு
2024-ம் ஆண்டிற்கான "வைக்கம் விருது" கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் தேவநூர மஹாதேவாவுக்கு வழங்கப்பட உள்ளது. இவர் சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளை எதிர்த்து வாழ்ந்தவர்.மக்களின் மொழியியல் உரிமைகளுக்கு அவர் வலுவான ஆதரவளித்துள்ளார். தேவநூர மஹாதேவா, பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்றவர்.
இந்த விருது, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசி பதக்கத்துடன் வழங்கப்படும். மு.க.ஸ்டாலின், 12-ந்தேதி கேரளாவின் வைக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் விருது வழங்குவார்.