சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
சிவகாசி அருகே நாராணபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது.இதில் மூன்று அறைகள் தரைமட்டமாகின. மேலும் காலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் அங்கு உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.முன்னதாக சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். 14 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மாதத்தில் மட்டும் ஐந்தாவது முறையாக பட்டாசு ஆலை வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.