வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் வன்முறையின்போது ஏற்பட்ட ஷோப்கன்ஜ் மாவட்டத்தில் சலீம் ஹுசைன் என்பவர் ஆகஸ்ட் 4ஆம் தேதி கொல்லப்பட்டார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் கட்சி பொதுச் செயலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தவிர 99 கட்சி ஆதரவாளர்களின் பெயர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர் மீது மேலும் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.