மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்க உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் துருவப் பகுதிகளில் ஆரோராக்கள் தென்படும் எனவும், பல பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே 27ஆம் தேதி, சூரியனில் உள்ள ஏ ஆர் 3664 என்ற சூரிய புள்ளி அதிசக்தி வாய்ந்த கதிர்களை வெளியிட்டது. இந்த கதிர்கள் எக்ஸ் 2.8 ரகத்தை சேர்ந்ததாக உள்ளது. கடந்த சில வருடங்களில் ஏற்படும் அதிசக்தி வாய்ந்த சூரிய கதிர்வீச்சாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சீரற்ற வகையில் காணப்படும் ஏ ஆர் 3664 சூரிய புள்ளி வரும் ஜூன் 6-ம் தேதி மீண்டும் ஒரு அதிசக்தி வாய்ந்த கதிர்வீச்சை பூமியை நோக்கி அனுப்பலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.