இந்திய கடல்வழி பாதுகாப்பை உறுதி படுத்தும் சோதனை வெற்றி பெற்றது.
இந்தியாவின் கடல்வழி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.) வெற்றிகரமாக கப்பல் எதிர்ப்பு ஏவுகணையின் சோதனையை நிறைவு செய்துள்ளது. இந்த சோதனை சந்திபூரில் நடைபெற்றது, இதில் ஏவுகணை குறுகிய தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த சோதனையில், ஏவுகணையின் மேன்-இன்-லூப் அம்சம் மற்றும் இருவழி டேட்டாலின்க் சிஸ்டம் செயல்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை, ஏவுகணை அதன் திட்டமிட்ட நோக்கங்களை பூர்த்தி செய்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.